Translate
Sunday, April 7, 2013
Saturday, April 6, 2013
ஏப்ரல் 6 : முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் நடந்த தினம்.
பண்டைய கிரேக்கத்தில் கிமு 776 முதல் ஜியஸ் எனும் கிரேக்க கடவுளை போற்றும் வகையில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வந்தன. போட்டிகளில் அடிமைகள் அல்லாத ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். வெற்று உடம்போடு போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதி. பெண்களின் நுழைவை தடுக்க இப்படி ஒரு முறை பயன்பட்டது.
தியோடோசிஸ் எனும் மன்னன் நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக கிறிஸ்துவத்தை ஆக்கிய கிபி 394 இல் இருந்து ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கு மத நம்பிக்கைக்கு எதிரானது எனத்தடை போட்டார்.
பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833 இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது.
குபர்டீன் எனும் பிரெஞ்சு வரலாற்றாசிரியர் இவ்விளையாட்டை துவங்குவதற்கான முயற்சிகளை எடுத்தார். ஏற்கெனவே ஜப்பாஸ் எனும் செல்வந்தர் அப்பெயரில் போட்டிகளை நடத்தி இருந்தார். பண்டைய ஒலிம்பிக் நடந்த மைதானத்தை அவரைக்கொண்டு சீரமைத்தார்கள்.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருந்த கிரேக்கத்தில் போட்டிகளை நடத்த வேண்டும் என்றபொழுது எதிர்ப்புகள் கிளம்பின. கிரேக்க இளவரசரை புத்திசாலித்தனமாக குபர்டின் குழு தலைவர் ஆக்கினார். அவரே முன்னின்று நிதி திரட்டினார்.போட்டிகள் ஆரம்பமாகின. பதின்மூன்று நாடுகள்தான் முதல் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டன.
முதல் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் இல்லை. முதல் பரிசு வெள்ளி பதக்கம், -பாராட்டு பத்திரத்துடன் தலையில் சூட்டுவதற்கு ஆலிவ் இலைகளால் தயாரிக்கப்பட்ட கிரீடமும், இரண்டாம் பரிசாக வெண்கல பதக்கம், பாராட்டுப் பத்திரத்துடன் புன்னை இலைகளால் தயாரிக்கப்பட்ட கிரீடமும் உருவாக்கப்பட்டன. மூன்றாம் பரிசு கிடையாது. மொத்தம் இருபத்தி ஒன்பது ஆண்டுகள் ஒலிம்பிக் கமிட்டி தலைவராக குபர்டின் செயலாற்றினார். அவரின் கனவு இன்றைக்கு மிகப்பெரும் உயரங்களை தொட்டிருப்பதை காண்கிறோம் இல்லையா? சிவீtவீus, கிறீtவீus, திஷீக்ஷீtவீus (வேகமாக, உயரமாக, வலிமையாக ) என அவர் வகுத்த ஒலிம்பிக்கின் தாரகமந்திரம் ஒலிம்பிக் விளையாட்டுக்கும் பொருந்தி வந்திருக்கிறது.
Friday, April 5, 2013
NATURE CURE (AYURVEDIC) TO REGAIN KIDNEY FUNCTINALITY
Oncophyta Free protocol for
NATURE CURE (AYURVEDIC) TO REGAIN
KIDNEY
FUNCTIONALITY
Do Ginger extract massage every day. This will restore
about 50% of the lost kidney function. To restore maximum (close to 100%)
function, do the following every day in addition to ginger extract massage.
This protocol is recommended for those at early stage of kidney degeneration to
prevent dialysis. Since this is an external treatment, this can be done on
dialysis patients too, in order to reduce the frequency of dialysis.
1.The
massage must be done 2 hours after breakfast or lunch, preferably atthe same
time every day. Do not talk during the ginger massage. Have positive thinking
like your kidney is definitely going to restore function.
2. Add
a pinch of crushed omam (oragane) in a salad, boiled egg white, rasam or
poriyal / koottu and make it a habit to take this every day.
3. Take
cold water bath every day, may be during winter (October-December / January)
you may take warm water bath if you cannot stand cold water bath.
4. Take
a small quantity of fruits (half apple/ one slice of pine apple / 10 numbers of
pannier grapes/ guava) every day. These are the permitted fruits.
5. Take
half tea spoon of clean turmeric powder with milk or water after dinner every
day.
6. Take
a natural vitamin supplement like Spiruplus of Oncophyta everyday one capsule.
7. Take
500-700 ml of water of mineral water quality every day. This quantity can be
increased to 1 liter when the urine output goes up to 700 ml.
8. Avoid
totally banana, potato, tomato and egg yolk (yellow).
9. Avoid
deep fried non-vegetarian items and all food and bakery products containing
vanaspathi.
10. Avoid
salty foods and snacks. Add half the quantity of saltin cooked foods.
Procedure
for Ginger massage:
1.Take
125 g of washed ginger and cut them into pieces and crush in a mixie or ammi.
2.Put
this in a kata cloth and tie it.
3.Boil
about 3 liters of water. When bubbles come, squeeze the ginger into the boiled
water. Also put the tied ginger inside into the boiling water and close the pot
with a plate.
Thursday, April 4, 2013
ஏப்ரல் 4 - மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம்
மார்ட்டின் லூதர் கிங்... இணையற்ற போராளி. வெள்ளையர்கள்
அமெரிக்காவை பிடித்த பின்பு அங்கே வேலை செய்ய எண்ணற்ற ஆப்ரிக்க
மக்களை கொண்டுவந்தனர். அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர்.
ஆடு, மாடுகளை விற்பதை போல அடிமை விற்பனை பல இடங்களில்
இருந்தது. கொல்லபட்டாலும் கேட்பதற்கு ஆளில்லாமல் இருந்த
அவர்களுக்கு அடிமைமுறையில் இருந்து விடுதலை கொடுத்து லிங்கன்
கொடுத்த அறிவிப்பில் நாடே இரண்டுபட்டது. உள்நாட்டுப்போருக்கு பின்
ஒன்று சேர்ந்தது. சட்டரீதியாக அவ்வாறு சொல்லப்பட்டாலும் கொடுமைகள்
தொடர்ந்தன. அப்பொழுது தான் மார்ட்டின் லூதர் கிங் வந்தார்.

அன்பாயுதம் ஏந்த சொன்னார். நன்னெறியை
கேடயமாக கொள்ள சொன்னார் கருப்பு கேவலம்
என்கிற எண்ணம், பலூன் கடைகாரரின்
நிறத்திற்கும் சாதனைக்கும் சம்பந்தமில்லை
என்கிற சொல்லில் பறந்தது. பாதிரியாராக மாறிய
இவர் இயேசுவின் போதனைகளை
அமெரிக்காவின் மனசாட்சியை எழுப்ப
பயன்படுத்திக் கொண்டார். அன்பால் யாவும் சாத்தியம் என முழங்கினார்.
அவரின் எனக்கொரு கனவிருக்கிறது பேச்சை படித்து பாருங்கள்
மெய்சிலிர்த்து போவீர்கள். தன் வீட்டில் குண்டுவீசப்பட்ட பொழுதுகூட
அன்பையே போதித்தவர். ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண்ணுக்கு
பேருந்தில் உட்கார இடம் மறுக்கப்பட்ட பொழுது ஒரு வருடம் முழுக்க
அத்தனை கறுப்பின மக்களையும் அலபாமா மாகாணத்தில் பேருந்தில்
போகாமல் நடந்து அல்லது டேக்ஸியில் போக வைத்து உரிமையை
மீட்டெடுத்தவர்.
எங்கேயும் எப்பொழுதும் கொல்லப்படலாம் என தெரிந்தும்
தீர்க்கமாக வெள்ளை வெறியர்களில் அன்பை விளைவிக்க முயன்ற
அன்புக்காரர். குண்டுகள், தாக்குதல்கள் என எல்லாமும் சுற்றி தாக்கிய
பொழுதும் "என் தலையில் இரண்டு காளைகள் மோதுகின்றன - ஒன்று
அன்பு; இன்னொன்று அராஜகம் - இதில் எது ஜெயிக்கிறது தெரியுமா? எதற்கு
நான் அதிக உணவிடுகிறேனோ அதுவே ஜெயிக்கிறது! அன்பே போதும்
எனக்கு!" என்றார் முப்பத்தைந்து வயதில் நோபல் பரிசை பெற்றவர் அவர்.
அந்த பணத்தை முழுக்க கறுப்பர்களின் உரிமை மீட்டெடுப்பு பணிகளுக்கு
செலவு செய்தார். இறுதியில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார். அவரின்
கனவை அத்தேசம் நிறைவேற்றியது அதைவிட பெரிய மரியாதை
வேறென்ன இருக்க முடியும்?
Wednesday, April 3, 2013
மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது:
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
2.மிக அதிகமாகச் சாப்பிடுவது:
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.
Subscribe to:
Posts (Atom)







