உஷ்ணம்,காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது
குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால்
பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப
நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை
விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும்
தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார்
திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.
