Translate

Wednesday, August 21, 2013

பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!

                            


   




 மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக்கட்டிடமும் இருக்கக்கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம்என்னகாரணம்தேடிப்பார்ப்போம் வாருங்கள்.

        கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன்மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத்தெரியாதுஆனால், அதற்குப்பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது

      கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகுதானியத்தை அதிகமாக கொட்டினார்கள்காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறதுஅப்போது எந்தகல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!. 

         இவ்வளவுதானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்குவிழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழையதானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறதுஅதன்பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. 

    அவ்வளவுதானா அதுவும்இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழைபெய்தது அன்றுதொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வதுஇவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!! 

    ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் "எர்த்" ஆகும்மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்ததுஅடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனைபேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள்அதாவது சுமார் 7500 சதுரமீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!. 
     சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!!

     இதை எல்லாம் பார்க்கபோனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. 

சும்மாவா சொன்னா
ங்க பெரியவங்க !!!

No comments:

Post a Comment