Translate

Thursday, October 23, 2014

எண்ணெய் தேய்த்து குளிப்பது எப்படி?


               

                    முன்னோர்களின் வழிமுறைகளும் பழங்காலத் தொடர்புகளும் தளர்ந்துள்ள இக்காலத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பது எப்படி என்பதை நீங்க தெரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் முன் உடல்நிலை, அந்நிலைக்கேற்ற எண்ணெய், குளிப்பதற்கு உபயோகிக்கும் தண்ணீர், சூழ்நிலை இவ்வளவும் கவனிக்கத்தக்கவை. தமிழ்நாட்டின் நிலம் மற்றும் பருவ நிலைக்கு மிகவும் உகந்தது நல்லெண்ணைதான்.

குளிக்கத் தேவை அஞ்சுகாயணும் என்பர்.
இதற்குஐந்து பொருள்கள் காய்ந்திருக்க வேண்டுமென்று பொருள். இந்த ஐந்தும் யாவைப வயிறு, எண்ணெய், அரப்பு, வெயில், தண்ணீர் இந்த ஐந்தும் காய்ந்து கொண்டிருக்க வேண்டும்.

Thursday, May 1, 2014

சித்த மருத்துவத்தின் பயன்களில் சில


தேள் கடி மருந்துகள்:-


         எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும்.
        கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும்.
      கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.
       சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.
       கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும்.

Wednesday, April 2, 2014

கிட்னி அறிந்ததும் அறியாததும்!


                             “ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்…” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் இதோ:-
யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.

Wednesday, March 12, 2014

Bank Names & their Taglines in India



Allahabad Bank : A tradition of trust

Andhra Bank : Much more to do

Bank of Baroda : India’s International bank

Bank of India : Relationship beyond Banking

Bank of Maharashtra : One Family One Bank

Bank of Rajasthan: Together we prosper 

Monday, February 24, 2014

தேங்காய்


              தேங்காய் நல்லதா, கெட்டதா என்பதில் பலருக்கும் பலவிதக் கருத்துகளும் கேள்விகளும் உண்டு. கேரளா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும்  இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தேங்காய் இல்லாமல் சமையல் ருசிப்பதே இல்லை. சாம்பாரோ, ரசமோ, கூட்டோ, பொரியலோ, வேறு  எந்த உணவோ... அதில் பிரதானமாக இடம் பெறுவது தேங்காய். அவர்களுடன் ஒப்பிடும் போது, நம்மூரில் தேங்காயின் உபயோகம் சற்று  குறைவுதான். அதிக தேங்காய் ஆபத்தானது என்று அதைத் தவிர்ப்பவர்கள் ஒரு பக்கம்... 

நோய்களை தகர்க்கும் முருங்கை

       

                  இன்றைய சூழ்நிலையில் நோய் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்கிற நிலை உள்ளது. உணவு, தண்ணீர், காற்று போன்றவைகளால் ஏராளமான  நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன. தற்போது விவசாய நிலங்கள் பெருமளவில் குறைந்து வருகிறது. என்றாலும் இருக்கும் இடத்தில்  விவசாயம் செய்கின்றனர். ஆனால் இவை இயற்கையான முறையில் விவசாயம் செய்ய முடியாத நிலையில் ரசயான உரங்களை கொண்டு உணவு  பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த ரசாயன உரமானது உணவு பொருட்களுடன் சேர்ந்து நமது உடலுக்குள் தஞ்சமடைந்து விடுகிறது. 

செரிமானப் பிரச்சனைக்கு அஞ்சறை பெட்டி மருந்து



       ஜீரணம் ஆகாமல் அவதி படுவோர்கள் வீட்டிலேயே மருந்து தயாரித்து பருகலாம். வீட்டில் இருக்கும் சுண்டைக்காய், பெருங்காயம், பூண்டு, ஓமம், சீரகம் என அஞ்சறை பெட்டியில் உள்ள அனைத்து பொருட்களும் உடல் நலத்தை காப்பதற்கு மிகவும் உதவுகிறது. சாப்பிட்ட ஒரு மணி நேரம் கழித்து, நீர் மோர் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒரு சுண்டைக்காய் அளவு பெருங்காயத்தைப் பொடித்துப் போட்டு கலக்கி, 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஜீரண பிரச்சனைகளை நீக்கும். 

ஞாபகசக்தியை அதிகரிக்கும் இஞ்சி


           இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது
நாம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகும். இஞ்சிக்கு  ஞாபகசக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி  ஏற்பட்டால் இஞ்சிசாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும். பசி இல்லை என்றால் இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் அறைத்து சாப்பிட்டால்  நன்கு பசி எடுக்கும்.