Translate

Tuesday, August 20, 2013

சிறுநீரக நோய்கள் நீங்க சித்தர்கள் அருளிய மருந்துகள்

சிறுநீரகம்:


               இடுப்புக்குச் சற்று மேலே முதுகுத்தண்டுக்கு இருபக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக்காய்கள் உள்ளன. இது முந்திரிக் கொட்டையைப் போன்ற வடிவமும், ஏறக்குறைய நான்கு அங்குலநீளமும், இரண்டு அங்குலஅகலமும், ஒரு அங்குலப்பருமனும் கொண்டதாக இருக்கும்இதன் உட்பகுதி முழுவதும் மயிரிழை போன்ற மிகச்சிறிய இரத்தக்குழாய்கள் குறுக்கும் நெடுக்குமாய் பின்னப்பட்டு வலைபோலக் காணப்படும்இதை நம் உடலின் வடிகால் என்று கூறலாம்.



            இருதயத்திலிருந்து பம்ப் செய்யப்பட்ட சுத்த இரத்தமானது உடல்முழுவதும் சென்று அவைகளுக்கு வேண்டிய சக்திதயை அளித்து, அங்குள்ள வேண்டாத கழிவுகள், தேய்ந்த அழிந்த பொருட்களை எடுத்து வரும் ரத்தம் இந்த வடிகாலான சிறுநீரகத்தை அடைகிறது. அங்கு மிக விரைவாக வேண்டாத பொருட்களையும், நீரையும் பிரித்து விட்டு ரத்ததை இருதயத்திற்கு அனுப்புகிறதுகழிவுப்பொருட்களை ஒரு வாய்க்காலின் மூலமாகச் சிறுநீர்பைக்கு அனுப்புகிறதுசிறுநீர்ப்பை அடிவயிற்றின் கீழப்பாகத்தில் இருக்கிறதுஅங்கு கழிவுநீர் சொட்டுச்சொட்டாய் வந்து சேரும். 

        சிறுநீர்ப்பை பாதி நிறைந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்படும்இந்தச்சிறுநீரில்  95 சதவீதம்நீரும்,  5 பங்கு பிற கழிவுப் பொருட்களும் இருக்கும்அதில் பாதி அளவு தசைகளும் எலும்புகளும் அழிவதால் ஏற்படும் கழிவுப்பொருட்களாகிய யூரியாவும் மீதியில் நாம் 
உண்ணும் உணவில் உள்ள உப்பு, சல்பேட் போன்றவை இருக்கும்.
பிட்யூட்டரி,  தைராய்டு, கல்லீரல், பாங்கிரியான் இவற்றில் ஏதேனும் ஒன்றில் நோயோ, பாதிப்போ ஏற்பட்டால் அது மூத்திரக்காயையும் 
பாதிக்கும்.

சிறுநீரகக்கல்:

        சிறுநீர் போக வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்பட்டதும் சிறுநீர் கழிக்க வேண்டும்.  அவ்வாறு போகாமல் அடக்கிவைப்பது, கடினநீர், உப்புச்சத்தால் நீர் குடிப்பது போன்றவற்றால் சிறுமணல் போன்ற உப்புகள் சிறுநீரகத்தில் தோன்றும்அதிகம் சுத்தமான நீர் குடித்தல், யோகாசனம் செய்தல் போன்றவற்றால் இதனை நீக்கலாம்அவ்வாறு செய்யாது இருந்தால் அந்த மணல் ஒன்று சேர்ந்து உறைந்து கற்களால் மாறும்சிறுநீர் போகும் வழியை அடைக்கும்பொறுக்க முடியாத வலி ஏற்படும்.


சிறுநீரகநோய்கள்நீங்கசித்தர்கள்அருளியமருந்துகள்:

1.
ரோஜாப்பூ ஊற வைத்த தண்ணீரில் முள்ளங்கியின் சாறுவிட்டு தினம் நான்கு வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நோய் ஒழியும்.

2.
நன்னாரிவேர், கொத்துமல்லி, சிறு நெருஞ்சி தலா 50கி. எடுத்து நசுக்கி 2 லிட்டர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து வடித்து தினம் மூன்று 
வேளை நூறுமில்லி வீதம் சாப்பிட்டு வர நீர்எரிச்சல் தணியும்.

3.
கொத்தமல்லியும் புளியங்கொட்டைத்தோலும் வறுத்துப் பொடித்து காபிபோன்று கசாயமிட்டுக் குடித்தால் நீர்க்கடுப்பு தீரும்.

4.
ஆடு தீண்டாப்பாளை, கருஞ்சீரகம் இவற்றை அளவாக எடுத்து காடிநீர் விட்டரைத்து தொப்பிளின் கீழ்பூச நீரடைப்பு விலகும்.

5.
வாழைக்கிழங்கில் ஊறும் நீருடன் நெல்லிக்காய் அளவு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிட மூத்திர அடைப்பு அகலும்.

6.
வாழைத்தண்டை சிறுதுண்டுகளாக்கி தயிரில் கலக்கி தாளிக்க தயிர்பச்சடியாக உண்ண நீர் இறங்கும்.

7.
வெங்காயத்தை அரைத்து விழுதாக்கி 100 கிராம் வீதம் உட்கொள்ள மூத்திரத்தாரையில் உண்டாகும் கல்கரையும். கருஞ்சீரகத்தைத் 
தேனுடன் கலந்து சாப்பிட்டு வர கல் கரையும்.

8.
பொட்டிலுப்பு 100 கிராம், வெங்காரம் 100 கிராம், சிலாசத்து 100 கிராம் இவை மூன்றையும் நெல்லிக்காய்ச்சாறு, காற்றாழைச்சாறு,
முள்ளங்கிச்சாறு, வாழைத்தண்டுச்சாறு இவை மூன்றையும் முறையே ஒவ்வொரு நாளாக விட்டு அரைத்து வில்லைத் தட்டி புட மிட 
வேண்டும். புடம் ஊறிய பிறகு எடுத்துக் கல்வத்தில் இட்டு அரைத்துப்புட்டியில் எடுத்து வைத்துக் கொண்டு 20 மில்லிகிராம் மோரில் கலந்து சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும்.

9.
வெங்காரம் சிலாசத்து, நண்டுக்கல்இவற்றை 20 கிராம் எடுத்து கற்றாழைச் சாறு விட்டுஅரைத்து புடமிட்டு எடுத்துக்கல் வத்திலிட்டு 
அரைத்து எடுத்து வைத்துக் கொண்டு காலை, மாலை சிட்டிகை அளவு எடுத்து நெய்யில் கலந்து சாப்பிட வேண்டும். மூத்திரம் மோர்கலந்தது 
போல் வெளியாவது நிற்கும்.

10.
முட க்கொத்தான் ஒரு பலம், வெள்ளைப்பூண்டு அரைப்பலம், இரண்டையும் அரைத்து மூன்று நாட்கள் உட்கொள்ள சிறுநீர்க்கட்டு இறங்கும்.

11.
பச்சரிச்சி ஆறுபலம் எடுத்து விராலி இலைத் துளிரைக் கூட்டி கொடுத்திட்டால் சிறுநீரில் இரத்தம் வருவது நிற்கும்.

12.
சுக்கு, இந்துப்பு, கல்மதம் இவற்றை நீர்விட்டு அரைத்துக் குடிக்க வயிறு கழிச்சல் உண்டாகும். நீர்க்கடுப்பு தீரும்.

13.
நொச்சி இலை ஒரு பிடியும், முருக்கம் பூ ஒரு பிடியும் சட்டியில் இட்டு வதக்கி விரைவாதம் கட்ட குணமாகும். கழற்சி இலை, உழிஞ்சை இலை, பூண்டு, வசம்பு, உப்பு இவைகளைச் சேர்த்து சட்டியைக் காயவைத்து அதிலிட்டு வெதுப்பிசி வந்து வருகிறபோது ஒரு பிழிதுணியில் தட்டி கட்டி வீங்கியிருக்கிற விரையில் அனத்தவும். இப்படி மூன்று தடவை அனத்தி மூன்றாவது தடவை இலை வைத்துக் 
கட்டவும்இப்படி மூன்று தடவை வைத்துக்கட்டினால் விரைவீக்கம், வாதம், அண்டசூலை நோய்கள் குணமாகும்.

14.
வசம்பு, உள்ளி, வழுதலை, மிளகு, சுக்கு வகைக்கு அரைபலம் இவைகளை அரைத்து வெந்நீரில் 5 நாள் உட்கொள்ள அண்டவாதம் 
குணமாகும்.

15.
மிளகு ஒருபலம், பூரம் ஒரு களஞ்சிஎடை, லிங்கம் கால்களஞ்சி எடை இவைகளைத் தேன்விட்டு அரைக்க மெழுகாகும். இந்த மெழுகை 
தூதுளங்காய் அளவு உருட்டி இரண்டு வேளை வீதம் ஐந்துநாள் உட்கொள்ள விரைவாதம் இடைஞ்சல் நீங்கும்உப்பு, புளி, புகை நீக்க வேண்டும்.

17.
கழஞ்சிவேர், கழற்சிவிதை இரண்டையும் எடுத்து சிறுநீர் விட்டரைத்து கொதிக்கவைத்து பூசி வர விரைவீக்கம் குறையும்.
புளியின் வடக்கு நோக்கிப் போகும் வேரை எடுத்து வந்து சாராயம் விட்டரைத்து விரையில் பூச வீக்கம்குறையும்.

18.
கொழுஞ்சி இலை, வேப்பிலை தளிர் இலைகளை கழற்சிஇலை இடித்துப் பிழிந்த சாற்றில் அரைத்துக் கொதிக்கச் செய்து பூசி வர விரை வீக்கம் குறையும்.

19.
அமுக்கூரம், கழற்சிவிதை, காந்தம், எள்ளுவிதை, யானை திப்பிலி இவற்றை அளவாக எடுத்து முட்டை வெண்கரு விட்டரைத்துப் பூசி 
வந்தால் விரைவீக்கம் குறையும்.

20.
முருங்கையின் வடக்கு நோக்கிப் போகும் வேர், சுக்கு இவற்றை எடுத்துச் சாராயம் விட்டரைத்துப் பூச குணமாகும்.

21.
வெள்ளை எருக்கலை வேர் தொலி, சர்க்கரை எடுத்து வந்து அரைத்து ஆறு வேளை உட்கொள்ள விரைவாதம் நீங்கும்.

22.
யாழ்ப்பாண புகையிலையை வாங்கி துண்டாக்கி விரையில் பூசி வர வீக்கம் குணமாகும்.

23.
அத்தி இலை, வில்வ இலை, வேம்பு இலை, ஆடா தொடை இவைகளைச் சமனளவாக எடுத்து நிழலில் காய வைத்து இடித்துச் சூரணம் செய்து காலை, மாலை பாலில் கலந்து சாப்பிட சிறுநீரகம் நல்ல முறையில் செயல்படுவதுடன் கல்லடைப்பு, நீர்த்தாரைப்புண், நீர்ச்சுருக்கு நோய்கள் குணமாகும்.

24.
படிகாரம் 35 கிராம், கல்மதம் 35 கிராம் எடுத்து முறைப்படி சுத்தி செய்து குழியம்மியிலிட்டு சேர்த்து கற்றாழைச்சாறு விட்டு நன்கு நெகிழ 
ஆறுமணி நேரம் அரைத்து வில்லை செய்து வெயிலில் உலர்த்தி அகலில் வைத்து சீலை செய்து 50 எருவில் புடமிட்டெடுக்க உயர்ந்த 
பற்பமாகும். இந்த பற்பத்தைத் தேனில் கலந்து கொடுக்க சிறுநீரில் விந்து விழுவது நிற்கும்.

25.
வெள்ளரிக்காயானது சிறுநீரக நோய்களை நீக்கவல்லது. சிறுநீர் பிரியாமல் அடிவயிறு ஊதிப்போனால் வெள்ளரிக்காய் விதைகளை 
அரைத்து அடி வயிற்றில் பூசினால் சிறிது நேரத்தில் நீர் பாய்ந்து விடும்.

26.
சிறு பசலையானது நீர்க்கடுப்பு, நிரடைப்பு, வெள்ளைபடுதல், சுபையின்மை, வாந்தி ஆகியவை போக்கும்.

27.
சிறுபீளையால்பாண்டு, பெரும்பாடு, நீர்எரிச்சல், நீரடைப்பு, கல்லடைப்பு, குடற்சூலை, குருதிச்சூடு முதலியன நீங்கும்.
இதன் இலைச்சாற்றினை குடித்து பரபெரும்பாடு, கல்லடைப்பு, நீரடைப்பு போகும்இதன் வேரைச் சேர்த்துக் காய்ச்சிக் குடீத்து வர சூல் கொண்ட பெண்களுக்கு வலு வேற்றும்.

28.
மேகம், வெண்புள்ளி, கல்லடைப்பு, நீர்வேட்கை, எலும்புருக்கி நோய் ஆகியவற்றையானை நெருஞ்சில் போக்கும். 

29.
சிறுபீளை மூலிகையின் இலைச்சாற்றால் 50 மி.லி. வீதம் குடித்து வர கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல் போம். 

30.
செங்கீரையினால் சிறுநீர்எரிச்சல், வெள்ளை, குருதிக்கழிச்சல், வயிற்றுக்கடுப்பு முதலியன தீரும்.



1 comment:

  1. yoga collective infotech

    yoga
    I like your post. This post really awesome and very helpful to me. Please keep posting good contents. Thank you

    ReplyDelete