Translate

Sunday, March 17, 2013

பீட்ரூட் மருத்துவக் குணங்கள !!!



          பீட்ரூட்டில் மாவுச்சத்து அதிகம்

உள்ளது. கண்ணுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி 

தரும். இரத்தத்தின் கழிவுகளை அகற்றி சுத்தம் 

செய்கிறது. வயிற்று பிரச்சனைகள் தீரும்.

        பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ 


சாப்பிடுறப்ப மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு,

பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும்.மற்ற 

கீரைகளைப் போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு 

சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் 

கீரை குணமாக்கும்.

        மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க


பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னால்

 குடிச்சுட்டு வந்தால் குணம் கிடைக்கும்.


       தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் 


பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும்

இதுக்கு இருக்கு.

      கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

      அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட்


இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்கின்றனர்.

பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் 

இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

       கிட்னி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற 


அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த சுத்திகரிப்பானாகவும் 

செயல்படுகிறதுபீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக 

இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.

       கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் 


அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த 

டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து

சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

       தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் 


ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் 

கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் 

பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்

தலையில் அதிக முடி முளைக்கும். 

      உடலுக்கு குளிர்ச்சி தரும்.மலச்சிக்கலை நீக்கும்.

      புற்று நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.

      இரத்த சோகை, உடல் எடை சரியாகும்.

      முகப்பொலிவு கூடும்.சிறு நீரக எரிச்சலை குறைக்கிறது.


      தீப்பட்ட இடத்தில் சாற்றைத் தடவ தீப்புண் கொப்புளமாகாமல் 


விரைவில் ஆறும்.

      பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும், இரத்த சோகையை 


குணப்படுத்தும்.பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமாணத்தக் கூட்டும்.

      பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தேய்த்து உண்டு 


வர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

      பீட்ரூட்டை வேகவைத்த நீரில் வினிகரை கலந்து சொறி, பொடுகு


ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

      பீட்ரூட் சாறை மூக்கால் உறிஞ்ச தலைவலி, பல்வலி நீங்கும்.

      பீட்ரூட் சாறுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தீப்பட்ட காயத்தில் 


பூசிவர புண் ஆறும்.

      பீட்ரூட்டைக் கஷாயமாக்கி உடலில் அரிப்பு ஏற்பட்ட இடங்களில் கழுவி 


வர அரிப்பு மாறும்.

      பீட்ரூட்டில் 87.7% நீர்ச்சத்தும், 1.7% புரதச்சத்தும், 0.1% கொழுப்புச் 


சத்தும், 0.8% தாதூப்புக்களும், 0.9% நார்ச்சத்தும், 8.8% மாவுச்சத்தும் 

அடங்கியுள்ளன. மேலும் சுண்ணாம்பு, மக்னீசியம், இரும்பு, சோடியம்

பொட்டாசியம், தாமிரம், கந்தகம், குளோரின் போன்ற உலோக சத்துகளும்

வைட்டமின் சி, தயாமின், ரைபோபிளேவின் போன்றவையும் உள்ளன

பீட்ரூட் கீரையில் வைட்டமின் அதிகமாக உள்ளது.

No comments:

Post a Comment