Translate

Thursday, February 28, 2013

தேசிய அறிவியல் தினம் - Feb 28

(சர்.சி.வி.ராமன், 'ராமன்விளைவை' கண்டறிந்தநாள் - Feb 28)

Sir. C.V.Raman
            அவனுக்கு வெங்கட்ராம் என்று பெயர் வைத்தார்கள். ஆனால், எல்லோரும் ராமன் என்றே அழைத்தார்கள்ராமன் பிறந்தது திருச்சியில் இருக்கும் திருவானைக்காவல்அப்பாவின்பெயர், சந்திரசேகர்அவர் கல்லூரி ஒன்றில் பேராசிரியர்அம்மா, சப்தரிஷிபார்வதிராமனையும் சேர்த்து வீட்டில் ஐந்து குழந்தைகள்அதில் ராமன் இரண்டாவது பிள்ளை.

ராமனுக்கு மூன்று வயதாக இருக்கும் போது அம்மாவோடு அவர்கள் விசாகப்பட்டினத்துக்கு மாறினார்கள்மற்றபிள்ளைகள் போல் இருக்காமல், ராமன் எப்போதும் அம்மாவோடு ஒட்டிக்கொண்டு,  ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு நச்சரிப்பான்.

ஒளி மற்றும் ஒலி ஆகியன பற்றியே திரும்பத்திரும்ப அவனது கவனம் சுழன்றதுவிசாகப்பட்டினத்தில் ஒன்றாம் வகுப்புப்படிக்கும் போது என்ன செய்தான் தெரியுமா
       நல்லெண்ணெய்,  கடலைஎண்ணெய், மண்ணெண்ணெய் என விதவிதமான எண்ணெய்களை வாங்கி வந்து அவற்றில் ஏற்றும் விளக்கின் சுடரில் வித்தியாசம் இருக்குமா என்று ஆராய்ச்சி செய்தான்.

அம்மா ஆடிப்போனார். ''டேய்நெருப்புடா'' என்று பதறினார்அதற்கு அவன் கவலைப்பட்டால்தானே!

அடிக்கடி முகம் பார்க்கும் கண்ணாடி காணாமல் போய் விடும்எங் கேஎனத்தேடினால், தோட்டத்தில் அல்லது மொட்டை மாடியில் சூரிய ஒளியைக்கண்ணாடியில் எதிரொளிக்க வைத்துப் பலவகை அறிவியல் விளையாட்டுக்களை ராமன் விளையாடிக் கொண்டு இருப்பான்.  எப்போதும் அவனைச்சுற்றி ஒரு கூட்டமே இருக்கும்.
ஒருநாள் சாதாரணக்கண்ணாடி மற்றும் ரசம்பூசப்பட்ட முகம்பார்க்கும் கண்ணாடி ஆகிய இரண்டையும் அடுத்தடுத்து வைத்து ஒளிஎதிரொளிப்பு, ஒளிஊடுருவல், இரண்டையும் ஒப்பிட்டு விளையாடினான். அப்போது முகம்பார்க்கும் கண்ணாடியை உடைத்துவிட்டான்அம்மா கடுமையாகத்திட்டினார்.

'
இனி எந்தப்பொருளையும் தொடக்கூடாதுஎன்று வீட்டில் உத்தரவு போட்டார்கள்ஆனால், சும்மா விடுவானா ராமன்அன்று மாலையே மொட்டை மாடியில் அதேபோல் அவனைச்சுற்றிலும் கூட்டம்மாலை நேரச்சூரியஒளியில் கை, கால்களை அசைத்து வித விதமான நிழல்களைத் தோற்றுவித்தான்அடுத்து, ஒளிபற்றிய ஆராய்ச்சி அங்கே நடந்து கொண்டு இருந்தது. 'மதியம்நிழல்என்பான் ராமன்உடனே எல்லோரும் 'குட்டைஎன்பார்கள்யாராவது மாற்றிச்சொன்னால் அவுட். 'காலைநிழல்என்றால், 'மேற்கு’. 'மாலைநிழல்என்றால், 'கிழக்குஎன நிழல் விழும் திசையைச்சொல்லவேண்டும்இப்படி விளையாட்டும் அறிவியலுமாக மிளிர்ந்தான் ராமன்.

அவனது அறிவுப்பசிக்கு தீனிபோடுவது யானைக்குத் தீனி போடுவதை விடவும் கஷ்டமாக இருந்ததுஅப்பா, சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் பேராசிரியர் ஆனார்மிக வேகமாக பள்ளிப்படிப்பைப் பத்தே வயதில் முடித்தான் ராமன்இதற்கே அசந்து விட்டால் எப்படி?

11  
வயதில் கல்லூரி சென்ற ராமன், 13 வயதில் இயற்பியலில், பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவனாகத்தேறித் தங்கப்பதக்கம் பெற்றான்அவனோடு படித்த (21 வயதுதாண்டிய) 'அண்ணன்கள்எல்லாம் உறைந்து போனார்கள்.

எதிர் காலத்தில் சர்.சி.வி.ராமனாக இந்தியாவுக்கான முதல் அறிவியல் நோபல் பரிசைத் தட்டி வருவதற்கான அனைத்து அம்சங்களோடும் விளங்கினான் ராமன்.

ஆதாரம்: Journey in to the light (Life and Science of C.V.Raman) - G.Venkataraman.








No comments:

Post a Comment