Translate

Tuesday, May 7, 2013

கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம்


      பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல்


வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் 

அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.நெடிய

மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் 

நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் 

இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக

, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.

     பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர


வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் 

மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது

தவறு.

    நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும்.


இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர்

நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, 

வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும்.



    பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத்


தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர்.

    பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து


சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும்.

    தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிச்சல் நீங்கும்.

    பணங்கற்கன்டை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி பயன் படுத்தி 


வர அம்மை நோயால் ஏற்பட்ட உடல் வெப்பம் தாகம் போன்றவை

நீங்கும்.

    பனங்கிழங்கிற்கு ஊடல் குளிர்ச்சியை தரும் தன்மை உண்டு.இந்த


கிழங்கை சாப்பிட்டு வந்தாலுடல் அழகு பெறும்.உடல் பலமும் 

அதிகரிக்கும்.


பதநீர் மகிமை..

    பனை மரத்துல நுங்கு பிஞ்சு உருவானதும், அதை நாறைக் கட்டி,


வளர்ச்சியை கட்டுப்படுத்துவாக பிஞ்சு ஓரத்தில் லேசாக கீறிவிட்டு, 

தினமும் மூன்று முறை மரம் ஏறி, அந்த பிஞ்சை அழுத்த, சொட்டுச் 

சொட்டாக மண்பானையில் பால்(கள்) இறங்கும். இப்படி ஒரு மரத்துல 

மூன்று மாதம் வரை பால் எடுக்கலாம். அந்த பாலில் சுண்ணாம்பு 

சேர்த்தால் பதநீர் ரெடி. 

    சில இடங்களில் மண்பானை அடியில் சுண்ணாம்பை தடவி 


கட்டிவிட்டுடுவாங்க. இதனால மரத்திலிருந்து பானையை 

இருக்கும்போதே பதநீர் தயார். இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர 

பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை 

மிஞ்சமுடியாது.இந்த பதநீரில் சோறு சமைக்கலாம்; பொங்கல் 

வைக்கலாம்; கொழுக்கட்டை தயாரிக்கலாம்; அவியல் அரிசி 

படைக்கலாம். யானை இறந்தால் ஆயிரம் பொன்னுனு சொல்லுவாங்க. 

பனை இருந்தாலும் ஆயிரம் பொன்தான். பிஞ்சிலிருந்து மரமாகி, கீழே 

விழும் வரை எல்லா வகையிலும் பயன்தரும் என்பது நிதர்சனம்'',

சுண்ணாம்பு சேர்த்து எடுக்கப்படும் பனஞ்சறுக்கு பதர்நீர் என்று 


பெயர்.மேக நோய் இருப்பவர்கள் இதை 40 நாட்களிடைவிடாஅது அருந்தி 

வர அந்த நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

    பதநீரில் இருந்து எடுக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு,


ஆகியவற்றுக்கும் நோய் தீர்கும் குணங்கள் உண்டு.

    பனை நுங்கு கோடை கலத்தில் ஏற்படும் தாகத்திற்கு மிகவும்


ஏற்றது.பனங்கிழங்கை உலர்த்தி இடித்து மாவாக்கி, அதனுடன் தேங்காய்

உப்பு போட்டு சாப்பிட்டு வர உடலுக்கு பலம் உண்டாகும். மேலும் உடல்

பருமன் ஆகும்.

    பனம் பூவை சுட்டு சாம்பலாக்கி அதில் சிறிது தேங்காய் எண்ணெய் 


கலந்து புண்களின் மீது பூச ஆரும்.

பயன் தரும் பாகங்கள் . . .

நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை 


கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

வளரியல்பு. . . பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை,


கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை 

இந்தியாவில் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் 

வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை 

வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் 

மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது 

தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம்

வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை 

வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.


மருத்துவப் பயன்கள். . .
    பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. 


வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.

    பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு


கலவாதது கள் எனப்படும். 

   வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால்


போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் 

நிச்சையம் ஆறிவிடும். 

   புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் 


நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் 

சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான

கருப்பட்டி கிடைக்கும்.

   நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த


அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும்.

நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.

   பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம்


தருவது. சுட்டு சாப்பிடலாம்.

   பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து 


வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ்

உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த 

ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.

   பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை 


கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது 

தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.

   பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். 


வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார்

செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். 

இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் 

படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் 

பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் 

உண்டாக்கினார்கள்.

    கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த


சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.

   அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ்


செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். 

பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

   பனை வெல்லம், பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும். பசியை 


தூண்டும். புஷ்டி தரும். முன்பு சொன்னபடி, நுரையீரல் மற்றும் 

தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் 

பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது.

   எலிகளை வைத்து நடத்திய பரிசோதனையில் பனைவெல்லம், 


நிலக்கரி மற்றும் ஸிலிகா தூசிகளால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை

குறைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

   வெல்லம் அயச்சத்து மிகுந்தது. சோகை நோய்களுக்கு மருந்து. 


தமிழகத்தில் பனை மரத்தின் வெல்லத்தை இரண்டு வகையாக 

சொல்வார்கள். முற்றிலும் சுத்தப்படுத்தாத, கெட்டியான கரு நிற 

வெல்லத்தை “கருப்பட்டி” என்பார்கள். இதை சுத்தப்படுத்தப்பட்ட 

படிகங்களாக உருவாகும் சர்க்கரை ‘பனங்கற்கண்டு’ எனப்படும் இதற்கு 

மருத்துவ குணங்கள் உள்ளன. 

   பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி 


இளகும். முக்கியமாக தொண்டைப்புண், வலி இவை அகலும். சங்கீத 

வித்வான்கள் எப்போதும் பனங்கற்கண்டு கலந்து காய்ச்சிய பாலையே 

அருந்துவது வழக்கம். அதனால் அவர்களின் குரல் வளம் குறையாமல்,

பாதுகாக்கப்படுகிறது. கூடவே சில மூலிகைகளும் சேர்க்கப்படுவது 

உண்டு.

    தவிர பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுர


வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
   பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை 


தீர்க்கும் மருந்தாக உள்ளது. பனை நீரிலுள்ள சீனி சத்து உடலுக்கு

தேவையான வெப்பத்தை தருகிறது. இதிலிருக்கும் குளுக்கோஸ் 

மெலிந்து தேய்ந்து வாடிய உடலுடைய குழந்தைகளின் உடலை சீராக்கி

நல்ல புஷ்டியை தருகிறது.

   கருவுற்ற பெண்களுக்கும் மகப்பேறு பெண்களுக்கும் ஏற்படுகின்ற 


மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை குணப்படுத்துகிறது. 

இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. டைபாய்டு, சுரம், நீர்க்கட்டு முதலிய

வியாதிகளை போக்குகின்ற நல்ல மருந்தாகவும் இது செயல்படுகிறது.

   இதை அருந்துவதால் இருதய நோய் குணமாகும். இருதயம்


வலுவடையும். இதிலிருக்கும் கால்சியம் பற்களை உறுதிப்படுத்தி, 

ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு 

நிறத்தையும் மாற்றுகிறது.

   இதிலிருக்கும் இரும்புச்சத்து பித்தத்தை நீக்கி சொறி, சிரங்கு உள்பட 


சகல தோல் வியாதிகளையும் நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், 

காசநோய் இவைகளையும் நீக்குகிறது.

   மேலும் பதநீரானது சயரோகம், இரத்தக்கடுப்பு, அதிக உஷ்ணம்,


பசியின்மை, வயிற்றுப்புண், வாய்வு சம்பந்தமான நோய்களையும்

குணப்படுத்துகிறது.

No comments:

Post a Comment