Thursday, October 23, 2014

எண்ணெய் தேய்த்து குளிப்பது எப்படி?


               

                    முன்னோர்களின் வழிமுறைகளும் பழங்காலத் தொடர்புகளும் தளர்ந்துள்ள இக்காலத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பது எப்படி என்பதை நீங்க தெரிந்து கொள்ள வேண்டும்.

எண்ணெய் தேய்த்துக் கொள்ளும் முன் உடல்நிலை, அந்நிலைக்கேற்ற எண்ணெய், குளிப்பதற்கு உபயோகிக்கும் தண்ணீர், சூழ்நிலை இவ்வளவும் கவனிக்கத்தக்கவை. தமிழ்நாட்டின் நிலம் மற்றும் பருவ நிலைக்கு மிகவும் உகந்தது நல்லெண்ணைதான்.

குளிக்கத் தேவை அஞ்சுகாயணும் என்பர்.
இதற்குஐந்து பொருள்கள் காய்ந்திருக்க வேண்டுமென்று பொருள். இந்த ஐந்தும் யாவைப வயிறு, எண்ணெய், அரப்பு, வெயில், தண்ணீர் இந்த ஐந்தும் காய்ந்து கொண்டிருக்க வேண்டும்.